அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, July 6, 2020

*எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்* அந்தப் பாடல் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு என்ற இந்தப் பாடல் 1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293) *ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....* 2 .இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629) *இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...* 3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387) *உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்*. 4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124) *நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.* 5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35) *ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.* 6அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (80) 7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சேய்நன்றி கொன்ற மகற்கு.(110) 8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை உண்மையா னுண்டிவ் வுலகு. (571) *அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..* கண்ணதாசன் திருக்குறளையும் விட்டு வைக்கவில்லை தனது பாடல்களில். இறைவன் அளித்த *ஈடிணையில்லாக் கவிஞன்.*

No comments:

Post a Comment